பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா குறையும் – முதலமைச்சர் பழனிசாமி

Default Image

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும்.

கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.மாநகராட்சிகளிலும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்