மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா பாதித்தவர்கள் அறிகுறி இல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாதீர்கள். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
தொற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா வார்டுகளுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 14 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கூடுதலாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். 200 வார்டுகளிலும் 400 காய்ச்சல் முகாம்களை நடத்தி தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தெருக்களில் தன்னார்வலர்களை கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…