திருமுருகன் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Default Image

திருமுருகன் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை கொரோனாவில் இருந்து 1,62,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,138 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கொரோனா அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் ,மாவட்ட ஆட்சியர்கள்   என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்