உலகம் முழுவதும் தனது கோரத்தால் உயிர்களை குடித்து வரும் நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையானது உலகளவில் 25,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக 5,31,799 பேர் உலகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியுள்ள கொரோனா தாக்குதலுக்கு 19 பேர் மடிந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 35 ஆக கூடியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 144 தடையால் அத்தியாவசியங்கள் குறித்து அரசு கவனமுடன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், மருந்து கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன் காரணமாக வைத்து சிலர் தவறாக சாலைகளில் சுற்றி திரிவதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது இந்த அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதனபடி ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…