“ Corona ஆண்டவன் கொடுத்த தண்டனை “என அமைச்சர் கருத்து , இவர்களை வைத்து ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான் -கனிமொழி ட்வீட்

Default Image

“ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை ”  என்ற அமைச்சரின்    கருத்து குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார் .அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை.அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  பதிவில், “ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை “. உங்கள் ஆட்சி நாங்களே எங்களுக்கு தந்து கொண்ட தண்டனை. இவர்களைப் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்மையார் ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்