உஷார்!!144 தடை உத்தரவை மீறினால்..பாய்கிறது கடும் சட்டம்-ஆணையர் கரார்

Published by
kavitha

கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணமாக உலக முழுவதிலும் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதுடன்,மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவிய இந்நோயால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனை தடுக்க  மத்திய மற்றும் மாநில அரசு பல விழிப்புணர்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழக முதல்வரின் உத்தரவு படி தமிழகம் முழுவதும்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.இவ்வாறு மக்கள் தொகை அதிக கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பட்டுத்த அரசுகள் தங்களது முழு முயற்சியில் இறங்கினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை,பொதுமக்கள் பலர் வீரியத்தினை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.சிலர் இன்னும் விழிப்புணர்வின்றி செயல்படுகின்றனர்.இதனையும் கட்டுபடுத்த சென்னை காவல் ஆணையர் ஒரு கடுமையான உத்தரவினையும்,அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.அதன்படி தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பொதுமக்கள் நலன், பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த உத்தரவினை பிறப்பித்ததாக  சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Image

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

5 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

6 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

11 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

22 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago