கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு போன்ற நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை முடிந்தால் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவற்று இருப்பவர்களை அழைத்து சென்று சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆதவற்ற இவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இத்தையோர்க்கு உதவ நினைக்கும் தனி நபர்,தனியார் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக தங்களால் இயன்றதை செய்யலாம் மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்ற எண்ணிற்கோ அல்லது 044-25384520 என்ற எண்ணிற்கோ தொடர்புகொண்டு த்ங்களால் முடிந்ததைக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களாக கொடுக்க நினைப்பவர்கள் அரிசி,பருப்பு, எண்ணெய், பால் பவுடர் சாம்பார், ரசப் பொடி,நாப்கின், கோதுமை மாவு, சோப்பு போன்றவற்றை கொடுக்காலம் என்று மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…