#BREAKING: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா.!

Default Image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு  கொரோனா பாதிப்பு என தகவல்.

கோவை ஆட்சியரை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,51,820பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்