ஆவின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.
இதற்கு இடையில் சென்னையில் உள்ள மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர்
இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், 2 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால், பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆவின் பால் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.அதாவது, சென்னையில் ஆவின் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சேலம்,விழுப்புரம்,காஞ்சிபுரம் வேலூரில் இருந்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…