தமிழகத்தில் இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என மொத்தம் 8,981 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 6,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 8,981 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 4,531 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் மேலும் 8 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 984 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,08,763 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,817ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…