தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,981 பேருக்கு கொரோனா..!

Default Image

தமிழகத்தில் இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என மொத்தம் 8,981 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 6,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 8,981 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 4,531 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனவால் மேலும் 8 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 984 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,08,763 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,817ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்