தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,824 பேருக்கு கொரோனா..!

Default Image

தமிழகத்தில் இன்று 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 38 பேர் என மொத்தம் 4,862 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 2,731 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 4,824 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,17,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,60,449 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனவால் மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,814 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 688 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,07,058 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,577 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது வரை 121பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 110 பேர் குணமடைந்தும், 8 பேர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
BJP State President Annamalai
good bad ugly ajithkumar
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin