சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா.!

Default Image

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,954 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,982 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்