சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா.!

Default Image

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872  ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,310 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 158 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,9,034 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 8,405 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்