கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் இருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்றும் மேலும் 54 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 27 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 400-ஐ தொட்டுள்ளது.
இதனிடையே கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 90 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 23,303 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 106 பேர் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 87,159 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். இன்று மட்டும் 6,954 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 65,977 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில், 1,683 பேருக்கு கொரோன உறுதியானது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…