சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சபாநாயகர் தனபால்

Default Image

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்று  சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக  சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 72 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 11-ஆம் தேதி தலைமை செயலகத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்