மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருந்தது. சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என கூறியது. கொரோனா தோற்று குறைந்து, தற்போது அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது என்றும் இந்த பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால் சசிகலா முழுவதும் குணமடைவர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆனார். சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விடுதலைக்கான கையொப்த்தை பத்திரத்தில் பெற்றனர். விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். பிப் முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…