கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தும் பணியில் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் தலா 250 வீடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வர் என கூறிய அவர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சென்னையில் இதுவரை 9 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், ஒரு நாளுக்கு 50,000 பேருக்கு கொரோன தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் 100 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…