சென்னையில் கொரோனா நிலவரம்.! ராயபுரத்தில் 2,737 பேருக்கு பாதிப்பு.!

Default Image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,798 பேரும், திரு.வி.க. நகரில் 1,556 பேரும், தேனாம்பேட்டையில் 1,662 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,661 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1237 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்