குட் நீயூஸ்..”குடும்ப அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை” – தமிழக அரசு உறுதி..!

Published by
Edison

குடும்ப அட்டை மற்றும் நலவாரிய அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த,கிரேஸ் பானு என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ,ரேஷன் அட்டை மற்றும் நலவாரிய அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்,கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க,அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து,இந்த வழக்கானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியம்,கொரோனா காரணமாக இயங்கவில்லை .அதனால்,அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றார்.பின்னர்,அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதாகவும்,அரசு அதை பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து,உடனடியாக நிவாரணம் தேவைப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு உதவுவது குறித்து, அரசு முடிவெடுக்கும்படி,முதல் அமர்வு உத்தரவிட்டது.அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிவிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை,தள்ளி வைத்தது.

இந்நிலையில்,இந்த வழக்கானது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,தமிழக அரசு  தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில்,”11,449 மூன்றாம் பாலினத்தவர்களில் ரேசன் அட்டை வைத்துள்ள 2956 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 8493 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்”,என்று உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து,நீதிபதிகள் கூறியதாவது,”இந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதால் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களது முகவரியை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,நிவாரண தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க வழக்கின் விசாரணையை நீதிபதிகள்,மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

5 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

7 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

9 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

10 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

11 hours ago