கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இன்று (27.5.2021) தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன், ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் /ஆணையர், வணிகவரித் துறை அவர்களும்;
திருப்பூர் மாவட்டத்திற்கு திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத்துறை செயலாளர் அவர்களும்;
ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.பபு நில அளவை மற்றும் நிலவரித் திட்டஇயக்குநர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…