கொரோனா தடுப்பு – இதுவரை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.62.30 கோடி நிதி
கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பின்னர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் ரூ.62.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Corona வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் ஆகும்.
நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி! pic.twitter.com/MG9LeUn0X4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 3, 2020