கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு சென்னையில் நடந்த நகை கொள்ளை.
சென்னை தியாகராயநகரில் சாரதாம்பாள் எனும் தெருவில் உள்ள யாகூப் என்பவர் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 250 சவரன் நகைகளையும் மற்றும் வீட்டு வாசலில் இருந்த கார் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாகூப்பின் வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சேர்ந்த மொய்தீன் எனும் உறவினர்கள் என்பவர் தங்கி இருந்ததாகவும் அவர் இந்த வேலையைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளனர். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…