கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம்.. காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
Surya

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார்.

அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூக்கடை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அந்த முதியவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், முதியவர் தப்பி சென்ற வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

5 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

7 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

8 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

9 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

10 hours ago