மூடப்பட்டது மது கடைகள்..! தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

Published by
kavitha

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கின்ற வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டிய உள்ளனர். இதன் ஒரு பகுதியாக  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து  டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் ,மக்கள் ஊரடங்கு தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர் தனக்கு உள்ள அதிகாரத்தை கொண்டு, தேவையான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு பிறப்பிக்குமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரப்பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘எப்.எல்.-1’, ‘எப்.எல்.-11’ உரிமம் பெற்ற டாஸ்மாக் மது விற்பனை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டார். எனவே அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று அடைக்குமாறு  தனது சுற்றறிக்கையில் அறிவுறுத்தியதை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago