கொரோனா விவகாரம்… இன்று திருநெல்வேலியிலிருந்து 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்….

Default Image

உலகம் முழுவது தனது கோர  பிடியில் சிக்க வைத்துள்ள கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமகாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  நோய் பாதிப்பு உடையவர்களை தனிமைப்படுத்தி சிறப்பான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் இந்த தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர், இதன் தாக்கம் காரணமாக  28 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கி நோய் பாதித்த அதிகமானோரை குணப்படுத்தி வீடுகளுக்கு  அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகத்திற்கு  இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதன் ஒரு நிகழ்வாக திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்