கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

Published by
Rebekal

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற 33.31 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு நிகழ்ச்சியில் தடுப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் உலகில் உள்ள வல்லரசு நாடுகளே கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் அரசாங்கத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரமான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் நேரடி பரிசோதனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு உபகரணங்களும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடி மதிப்பிலான பல தொழில் துறைகள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

6 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

8 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

10 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

10 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

11 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

11 hours ago