சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண் மாயம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 4ஆம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த கர்ப்பிணி காணாமல் போயுள்ளார். ஊழியர்கள் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவரது முகவரியை வைத்து காவல் துறையினர் கர்ப்பிணியை தேடி வருகின்றனர்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…