தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில தினங்களில் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் வீடு திரும்பிய நிலையில், குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.
இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2-ம் தேதி வீட்டில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிறந்து 27 நாள்களான குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…