கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

கோவை மாவட்டத்தின் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தமிழக முதல்வர் இதற்கான தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில், கொரோனா ஒழிப்பு பணிகளில் மக்களுக்காக தீவிர பணிகளில் ஈடுபட்டிருந்த கோவை மாவட்டத்தின் ஆட்சியர் கு.ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதன்முறையாக தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்ட ஆட்சியர் இவர் தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்