#Breaking: தமிழகத்தில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 46 பேர் உயிரிழப்பு!

Default Image

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 15 பேரும், அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது.

இன்று உயிரிழந்தவர்களின், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 730 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 50 வயதுக்கு கீழ் உள்ள 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 27 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai