பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Default Image

பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்பொழுது, மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் விடுமுறைக்கு பின்பு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்