சென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.!

Default Image

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,694  ஆக உயர்ந்துள்ளது. இன்று 12  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 15,762  ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826  ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் 178 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,210 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,437 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்