அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா.!

Default Image

சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் காரணத்தால் நேற்று மட்டும் 203 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே சென்னையில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் 52 வயதான பெண் பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த பெண் பணியாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்