உணவு டெலிவரி செய்யும் இளைஞருக்கு கொரோனா.! அவர் சென்ற வீடுகளை கண்டறியும் பணி தீவிரம்.!

Default Image

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த ஊழியருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2058ஆக உள்ளது. அதில் தலைநகர் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த ஊழியருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மேலும், அந்த இளைஞர் உணவுகளை டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுளள்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்