சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு உறுதியாகியுள்ளது.
மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஐஐடி மாணவர்களுக்கு அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…