பிரான்சில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையின், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் குடும்ப தலைவருக்கு (44) உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனையடுத்து, கடந்த -ம் தேதி அனைவரும் மண்டபத்தில் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில், குடும்பத்தலைவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அவர்கள் 5 பேரும், காரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப தலைவரை மட்டும் கொரோனா வார்டில் அனுமதித்துவிட்டு மற்றவர்கள் மீண்டும் ராமேசுவரம் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…