கோயம்பேடு சந்தையால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 1082 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் என்றழைக்கப்படும் சென்னை கோயம்பேடு சந்தையில், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக இருந்த நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய காஞ்சிபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயந்துள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…