சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. சந்தைக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், அங்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வரும் வியாபாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 22 நாட்களில் 2,800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையில் தற்பொழுது கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியானது, மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…