இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 24,898 பேருக்கு கொரோனா..!

Default Image

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 24,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 24,898 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,678 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,70,596 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 21,546 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 11,51,058 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,52,130 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,35,45,987 ஆக உள்ளது. மேலும், தற்போது 1,31,468 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court