தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடந்துள்ளது!

Default Image

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ நெருங்கவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 5-ம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொடர்ந்து 56-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக, சென்னையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 227 பெரும், திருவள்ளூரில் 208 பெரும், மதுரையில் 210 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

seeman tvk vijay
INDvENG 3rd ODI ENG won the toss
rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy