தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக கொரோனா நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனாவை  கண்டறிய RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம் .கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு ஆகும். தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது.  தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்