முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தென் மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. முன்பை விட சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தென் மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். அதன்படி, 6ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 7ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிகிறார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…