சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவந்த அரியலூரை சார்ந்த கூலித் தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் ஏற்கனவே ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வேலை செய்து வந்த அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர், கடந்த 27 -ம் தேதி தனது ஊருக்கு சென்று உள்ளார். பின்னர், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அருகே உள்ள மருத்துவமனைக்கு இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்.இதனையடுத்து, தற்பொழுது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால், நக்கம்பாடி கிராமத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…