#Breaking : சென்னையில் 84 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

Default Image

சென்னையில் இன்று ஒரே நாளில் 1219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில்  சென்னையில் இன்று ஒரே நாளில்  1,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  84,598 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 68,193 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,997  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,407  ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்