கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் இரண்டு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 10,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையல் 17 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் இரண்டு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தி.ரு.விக நகர் 2,741, ராயபுரம் 2,488, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,305 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 மண்டலங்களில் தலா 2 ஆயிரத்தை கடந்திருந்தது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…