#BREAKING: சென்னையில் 29,000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,479 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,477 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு, இதில் இரண்டு பேர் வெளியூர்களில் இருந்து திரும்பியவர்கள்.இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 13,906 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14,723 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 294 பேர் உயிரிழந்துள்ளனர்.