உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா உறுதி.!

Default Image

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஐஐடி வளாகம், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1415 பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்