கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு.!

Default Image
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை  தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே காய்கறி கடைகாரர், சலூன் கடைக்காரர், பூக்கடை காரர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் 1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், அமைந்தகரை பகுதியில் 450 சிறிய கடைகள் அமைக்கவும்,  வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் சென்னன காவல்துறை மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருபவர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்