நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது.
அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சசிகலாவிடம் சில தினங்களுக்கு முன்னர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாட்களாக தொடர் விசாரணை நடத்தியது.
மேலும்,விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்,தற்போது சஜீவன் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும்,இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்தில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள் தேனி மாவட்டத்திற்கு திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்னூர் டிஎஸ்பியாக சந்திர சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சந்திர சேகர் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது குன்னூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாக காரணங்களுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சை பாபா பணியிடமாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…